என் வீடு

Favorites

Achalam.com
Mazhalaigal.com
Young Poet.org
ACOE.co.in
Brahmin Today.org
Healthcareall.org
Kalakad.org
RCC pipes.com
CIT76.com
Mazalais.com
Artistkidworld.com
Thamizhisai.com
CIT India.com
KTVR.com
Nilacharal.com
Azhagi.com

அஞ்சி அஞ்சி நடந்து வரும் அன்னம் அச்சத்திலே சிவந்துவிடும் கன்னம்

கவிதைக்குயில்

பாடுகிறது

குயில்பாட்டு 1

உலவும் தென்றல் காற்றினிலே
ஓடமிதே நாம் மகிழ ஊஞ்சலாடுதே

உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல

பார்த்துப் பார்த்து நின்றதிலே பார்வையிழந்தேன் - நீ
பாடுமொழி கேட்டதிலே வார்த்தையிழந்தேன்
நேற்று வந்த நினைவினிலே நெஞ்சமிழந்தேன் - நீங்கள்
நேரில் வந்து நின்றவுடன் என்னை மறந்தேன்

குயிலின் கவிதைகள்

சிந்தி நன்றாக சிந்தி நல்லதை சிந்தி நலமோடு சிந்தி

மறப்பதை மறக்க வேண்டும் நினைப்பதை நினைக்க வேண்டும்
நினைவில் நின்று விட்டால் மரணம் வரை மறக்ககூடாது
மறந்தால் நினைக்கக் கூடாது நினைப்பதற்கு முன் சிந்திக்க வேண்டும்
சிந்திக்க முன் முடிவெடுக்கக் கூடாது முடிவெடுத்து விட்டால் சிந்திக்கக் கூடாது.

அழிப்பதை விட உருவாக்குவது சிறந்தது, உருவாக்கிய பின் அழிக்கக் கூடாது
அழித்து விட்டால் அதை நினைக்கக் கூடாது. நினைத்துவிட்டால் அழிக்கக் கூடாது.
தெரிந்து கொள் தேவையானதை, தெரியாவிட்டால் கற்றுக்கொள்
கற்றுக்கொள்ள முதலில் எது என்பதை அறிந்து விடு, அறிய முதலில் சிந்திக்கத் தெரிந்துகொள்.

கற்றதைப் புதைத்துவிடாதே, புதைப்பது என்றால் கற்று விடாதே;
நல்லதைக் கற்றக்கொள், எது நல்லது என்பதை அறிந்துகொள்.
நல்லது என்றால் எது என்று கற்றுக்கொள்.
கற்றுக்கொள்ளும் போது கெட்டதை சிந்திக்காதே, விஷயத்தில் கவனம் எடு.

கவனத்தில் திசை திரும்பாதே. திசை திரும்பினால் கவனத்தைச் சிதறவிடாதே
சிதறவிடுமுன் சிந்தி ஒரு முறை, சிந்திக்காவிட்டால் கவனமாய் இருந்துவிடு
கவனத்தில் குழம்பாதே, குழம்பினால் குழப்பத்தில் மாட்டிவிடுவாய்.
மாட்டிவிட்டால் மீளமாட்டாய் மீண்டு விட்டால் நிமிர்ந்துவிடுவாய்.

நிமிர்ந்தவிட்டால் வெற்றிதான், வெற்றியின் பின் வாழ்வுதான்
வாழ்வுதான் என்று துள்ளி விடாதே, துள்ளி விட்டால் அள்ளிக்கொண்டு போய்விடும்.
அள்ளிக்கொண்டு போனால் பாதாளத்தில் போய் விடுவாய்
பாதாளத்தில் போனால் உன்னைத் தூக்கிவிட மறுத்துவிடுவார்கள்

பாதாளத்தில் போக வேண்டுமா என்று துள்ளு முன்னர் சிந்தி
துள்ளி விட்டு சிந்திகாதே, சிந்தித்துவிட்டால் பூரிப்படைவாய்
பூரிப்பில் முகம் மலர்வாய், முகம் மலர்நதல் அகம் மலரும்
அகம் மலருதே என்று மதிக்காமல் நடக்காதே.

மதிக்காமல் நடந்தால் உன்னை சிந்திக்க மாட்டார்கள்.
சிந்திக்கா விட்டால்உனக்கு மதிப்பிருக்காது.
மதிப்பு என்றால் என்ன என்று புரிந்தகொள்.
புரிந்து கொண்ட பின் அதன் படி நடக்கக் கற்றுக்கொள்.

அதன் படி நடந்துவிட்டால் நடந்த பாதையை மறந்துவிடாதே
மறந்துவிட்டால் தூற்றப்படுவாய் தூற்றியபின்
நல்வன் என்று பெயர் எடுக்கமாட்டாய்.
அதனால்...

சிந்தி நன்றாக சிந்தி நல்லதை சிந்தி நலமோடு சிந்தி.

rahini